அம்பாரை மாவட்ட விபுலானந்தா புணர்வாழ்வுக் கழகத்தினால் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்குப் பாராட்டு.

அம்பாரை மாவட்ட விபுலானந்தா புணர்வாழ்வுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட இலவச வகுப்பில் கலந்துகொண்டு இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீடசைக்குத் தோற்றி சித்திபெற்ற மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு 11 ஆம் திகதி வியாழக்கிழமை அம்பாரைமாவட்ட விபுலானந்தா புணர்வாழ்வுக்கழகத்தின் தலைவரும் யோகா கலைஞருமான கலாபூசணம் எஸ்.சந்திரலிங்கம் தலைமையில் சேனைக்குடியிருப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கழகத்தின்  உபதலைவர் பொறியியலாளர் வி.சர்வானந்தா கழகத்தின் செயலாளர் உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன் கழகத்தின் பொருளாளரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான  கே.செல்வராசா மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் கற்பித்த ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

Related posts