அம்பாறை மாவட்டதமிழ் மக்களுக்காக அளப்பரிய சேவையாற்றியவர் கவீந்திரன் கோடீஸ்வரன்

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் எமது தமிழ் மக்களுக்காகப் பல்வேறுபட்ட மக்களுக்குத் தேவையான விடயங்களை ஆற்றியுள்ளார். அதே போல் நாட்டின் தற்போதைய கொரோணா ஊரடங்கு நிலைமையில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த மக்களின் வாழ்வியலுக்கான பங்களிப்பினை மேற்கொள்ளும் முகமாக அம்பாறை மாவட்டத்தின் துறைநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையான பகுதிகளுக்கு சுமார் 25 லெட்சம் பெறுமதியில் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார் என திருக்கோவில் பிரதே சபையின் உறுப்பினர் காந்தரூபன் தெரிவித்தார்.
 
 தமிழ் கூட்டமைபபின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் நிதிப்பங்களிப்பின் மூலம் தற்போதைய நிலைமையில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்காக உதவிகள் வழங்கும் பணிகளை மேற்கொள்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
அம்பாறை மக்களின் மனங்களில் ஆழ ஊடுருவி, அனைவரோடும் அன்பாகவும், பண்பாகவும் பழகி, அவர்களின் தானும் ஒருவனாகி அவர்களின் மனங்களை வென்ற ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்.
 
இந்த மாவட்டத்திற்கான தமிழர்களின் உரிமைக்காகப் பல தடவைகள் குரல்கொடுத்து தனது அற்பணிப்பான செயற்பாடுகளைச் செய்த பாராளுமன்ற உறுப்பினர் என்றால் அது மிகையாகாது. தனக்கு வாக்களித்த மக்களுக்கு உண்மையாகவும், விசுவாசமாகவும், மக்கள் தொண்டனாகவும் தன்னை அடையாளப்படுத்தியவர் அவர்.
 
வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்ட காலத்திலும், கொரோனா அனர்த்தம் தற்போது ஏற்பட்டிருக்கின்ற நிலைமையிலும் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பதவியில் தற்போது இல்லாத நிலையிலும் கூட தனது சொந்த நிதியில் மக்களின் வறுமையை ஒழிப்பதற்காகப் பல்வேறு மக்களின் நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்.
 
நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில், ஒரு மக்கள் பிரதிநிதியாகத் தன்னுடைய மக்களுக்கு எவ்வாறான அபிவிருத்திகளை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியுமோ, முடியுமானவரை அத்தனையையும் பெற்றுதந்து தனது மாவட்டத்தின் அபிவிருத்திக்குப் பேருதவி புரிந்தவர்.
 
கம்பெரலியா, ரண் மாவத்த, விசேட அபிவிருத்தி ஒதுக்கம் என பலதரப்பட்ட வேலைத்திட்ட முன்மொழிவுகளை அரசிடமிருந்து பெற்று அப்பாறை மாவட்டத்தில் எவரும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டவர் எனவும் தெரிவித்தார்.

Related posts