அம்பாறை மாவட்ட சம்மாந்துறை தொடக்கம் கல்முனை வரையான நீர்பாசன பொறியியலாளார் பிரதேச எல்லைகுட்பட்ட பெரும்போக நெல் விதைப்புக்கான ஆரம்பக் கூட்டம்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை தொடக்கம் கல்முனை வரையான நீர்பாசன பொறியியலாளார்  பிரதேச எல்லைக்குட்பட்ட  பெரும்போக நெல் விதைப்புக்கான ஆரம்பக் கூட்டம்  (29) மாலை  சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில்  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எல்.எம் பண்டாரநாயக்க தலைமையில்  நடைபெற்றது.
 
இக் கூட்டத்தில் விதை நெல் விநியோகம், மானிய உர விநியோகம், நீர்ப்பாசனம்,  நெற்செய்கை, வாய்க்கால் பிரச்சினை, மற்றும் கால்நடைகளை வெளியேற்றுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
 
இதன் போது விவசாயத்திணைக்களம், நீர்ப்பாசனத்திணைக்களம், கமநல அபிவிருத்தித்திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களம், விவசாய கமநல காப்புறுதி சபை, வனவளத்திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்கள், உள்ளிட்டவைகளின் கடந்தகாலச் செயற்பாடுகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டன.
 
அத்துடன் இவ்வருட பெரும்போக விவசாய வேலைகள் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிப்பது என தீர்மானிக்கப்பட்ட துடன் விவசாய காப்புறுதி நிலங்களுக்குத் தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொடுக்கத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.
 
இதுதவிர இம்முறை நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளிடம் தரப்படுத்தப்பட்ட விதை நெற்களை செய்கை பண்ணுமாறும் மறுபயிர் செய்கை பன்னுவதற்கு உத்வேகம் வழங்கப்பட்டது விவசாயிகளினது சந்தேகங்களுக்கான விளக்கங்களும்,விவசாய தொழினுட்பங்களும் சம்மந்தப்படப்ட அதிகாரிகளால் வழங்கப்பட்டது
 
இக் கூட்டத்தில்  சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா ,சம்மாந்துறை உதவி  பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக், பிரதேச சபை தவிசாளர் விவசாய குழு தலைவர் ஏ.எம் நெளசாட் சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுகுற்ற பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோத்கர் ஏ.எமு நெளபீர் , சம்மாந்துறை   விவசாய கமநல சேவைகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், கால்நடை வைத்திய அதிகாரி பிரதேச செயலக அதிகாரிகள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Related posts