அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால் தீடீர் சுற்றிவளைப்பு

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால் கல்முனை மாநகர எல்லையினுள் உள்ள பல வர்த்தகநிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு   (20) மேற் கொள்ளப்பட்டது. 

பொருட்களினை விற்பனை செய்யும் போது நுகர்வோருக்கு நிபந்தனை விதிப்பது மேலதிக கட்டணங்கள்அறவிடுவது பொருட்களினை  பதுக்கி  வைப்பது தொடர்பான பொது மக்களினால் முறைப்பாடுகள்  கிடைக்கப் பெற்றதை அடுத்து 

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் குறித்த தீடீர் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப் பட்டது இதன் போது வியாபார நிலையங்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல்கள்மேற்கொள்ளப்பட்டதுடன் மேலும் பல வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

Related posts