அரசாங்க அதிபருடன் இலங்கை ஆசிரியர் சங்கம் கலந்துரையாடல் 

ஆசிரியர்களின் போக்குவரத்துக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுக்க மட்டக்களப்புமாவட்ட அரசாங்க அதிபருடன் இலங்கை ஆசிரியர் சங்கம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது

         .                            தற்போது நாட்டில் ஏறபட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடானது ஆசிரியர்களையும் கடமைக்கு செல்வதில் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியுள்ளது இது தொடர்பாக எரிபொருளை பெற்றுக்கொள்வதில் முறையான பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்திதருமாறு பல ஆசிரியர்களும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினை தெடர்பு கொண்டதற்கு அமைவாக ,  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உதய ரூபன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை தொடர்பு கொண்டுமேற்படி விடயம் தொடர்பாக பேசினார் 

மேலும் மாவட்ட அரசாங்க அதிபர் மன்முனைபற்றுவடக்கு பிரதேசசெயலாளருட தொடர்பினை ஏற்படுத்தி நாளையதினம் மட்டக்களப்பு வலயகல்விப்பணிபாளருடன் இதுதொடர்பாக சந்திப்புஒன்றினை நாடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

Related posts