ஆசிரியர் தியாகராசா கலையரசன் அவர்கள் சமாதான நீதவானாகச் சத்தியப்பிரமாணம்

நாவிதன்வெளிப் பிரதேசசெயலகப்பிரிவில் உள்ள றாணமடு 11 ஆம் கிராமத்தினைச் சேர்ந்த ஆசிரியர் தியாகராசா கலையரசன் அவர்கள் மாவட்டம் முழுவதுக்குமான சமாதான நீதவானாக அண்மையில் கல்முனை மாவட் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இவர் 11 ஆம் கிராமத்தினைப் பிறப்பிடமாகவும்  றாணமடு மாதிரிக்கிராமத்தினை வதிவிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பக்கல்வியினை மற்றும் இடைநிலை உயர்நிலைக்கல்வியினை றாணமடு இந்து மகாவித்தியாலயத்தில் கற்று கிழக்குப்பல்கலைக்கழகத்திற்குச் சென்று கலைப்பட்டத்தினை நிறைவு செய்த பின்பு இன்று சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடித்தோட்டம் வாணிவித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிக்கொண்டிருக்கின்றார்.

அதேவேளை இவர் விவசாய அமைப்புக்களின் முக்கிய பதவிகளில் இருப்பதுடன் விளையாட்டுக்கழகங்கள் மற்றும் இன்னும் பல பொது அமைப்புக்களில் அங்கத்தவராக இருந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts