ஆரையம்பதியில் இடம்பெற்ற 73வது சுதந்திர தின நிகழ்வு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73 வது சுதந்திரதின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தலைமையில் உணர்வு பூர்வமாக  நடைபெற்றது. 

 
இந் நிகழ்வில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், பிரதேச அமைப்பாளர்கள்,வட்டார அமைப்பாளர்கள், இளைஞர் முன்னணி, மகளிர் முன்னணி, விவசாயிகள் முன்னணி, கல்வி அபிவிருத்திச்சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்களும், பெருமளவான கட்சியின் ஆதராளர்களும் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர். 
 
இந் நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் பாற்சோறும், கட்டைச் சம்பலும் வழங்கப்பட்டு சுதந்திரதின வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts