ஆழிப்பேரலையால் உயிர்நீர்த்த உறவுகளுக்காக கல்முனையில் நடைபெற்ற 14 ஆண்டு நினைவஞ்சலி!

சுனாமி பேரலையால் காவுகொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கல்முனை சைனிங் விளையாட்டுக்கிகத்தின் ஏற்பாட்டில் இன்று (26) நடைபெற்றது.

கல்முனையில் அமையப்பெற்றுள்ள சுனாமி நினைவுத் தூபியில் பெருந்திரளான மக்கள் தங்கள் உறவுகளுக்காக அழுது புலம்பி கண்ணீர் மல்க தீபம் ஏற்றி மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் அதிசயராஜ் மற்றும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் உட்பட இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தினர்.

இன்று மதியம் கல்முனை ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் அனுசரனையுடன் சைனிங் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் அன்னதானமும் நடைபெறும்.

Related posts