இணைகரம் இளைஞர்கள் ஒன்றியத்தால் நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இணைகரம் இளைஞர்கள் ஒன்றியம்  அமைப்பானது பல்வேறு நிவாரண  உதவிகளை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில் இன்று வெள்ளிக்கிழமை(8) மட்டக்களப்பு மாவட்டத்தின்  ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட காயன்குடா பிரதேசத்தில்  வசிக்கும் 20 வறுமைப்பட்ட குடும்பங்களுக்கு வாணி சமூக  பொருளாதார சுய மேம்பாட்டு நிறுவனத்தின் நிதி அனுசரனையில் இணைகரம் அமைப்பினரால் இந்த உலர் உணவு பொருட்கள் வழங்கி
வைக்கப்பட்டது.

இதன்போது இணைகரம் இளைஞர்கள் ஒன்றியத்தியத்தின் தலைவர் கே.ரமேஸ் தலைமையிலான குழுவினர்கள் நேசக்கரம் நீட்டி உதவிகளை செய்து வருகின்றார்கள்

Related posts