இந்த நாட்டில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வையே தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது

இந்தநாட்டிலே எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுத்திட்டத்தை தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் முன்னெடுத்து வருகின்றார்.அத்தீர்வுத்திட்டத்திற்கு வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழர்களும்,தமிழ்கட்சிகளும் ஒன்று சேரக்கூடிய நிலைப்பாட்டில் இருக்கின்றோம் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மா.நடராஜா தெரிவித்தார்.

துறைநீலாவணை சுப்பர் கிங்ஸ் விளையாட்டுக் கழத்தின் 16ஆவது ஆண்டுதினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட விளையட்டுப்போட்டியிலே பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வு துறைநீலாவணை “சுப்பர் கிங்ஸ்” விளையாயாட்டுக் கழகத்தின் தலைவர் சுப்பிரமணியம்-மனோராஜ் தலைமையில் (6.5.2018) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினார் கே.சரவணமுத்து,அதிபர் கு.மனோகரன்,வர்த்தகர் கே.சங்கீத் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

அவர் தொடர்ந்து பேசுகையில்:-
இன்று வடகிழக்கில் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பல பின்னடைவுகளை சந்தித்துள்ளது.ஆனால் அந்த பின்னடைவுகள் தமிழ்தேசியக்கூட்டமைப்புக்குரிய பின்னடைவுவல்ல.அது வடகிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுக்கும் ஏற்பட்ட பின்னடைவுகள்தான் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.இந்த பின்னடைவுகள் சிங்கள பேரினவாதக்கட்சிகளால் ஏற்படுத்தப்பட்டு தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆளுவதற்கு போட்ட சதித்திட்டமாகும்.தமிழ் இனத்தை அடக்கி வாழலாம் என்பது பகற்கனவாகும். இந்த முன்னெடுப்புக்கு தமிழர்கள் ஒருபோதும் துணையிருக்க கூடாது.அந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்தவேண்டுமென்றால் தமிழ்கட்சிகள், தமிழ் அமைப்புக்கள் ஒன்றுசேர வேண்டும்.ஒன்று சேர்ந்து தமிழ்தேசியக்கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமென்ற ஒருகாலகட்டத்தில் இருக்கின்றோம்.எனவே ஒவ்வொரு தமிழர்களும் செயற்படுத்த வேண்டும்.அப்போதுதான் தமிழர்களுக்கான உரிமைக்குரல் தேசியத்திலும்,சர்வதேசத்திலும் ஒலிக்கும்.இன்று எமது கட்சிகளை உடைப்பதற்கும்,சின்னாபின்னமாக்குவதற்கும் தமிழர்களாகிய நாங்கள் வடகிழக்கில் பதிலடி கொடுக்க வேண்டும்.

கடந்தகாலத்தில் தமிழ்மக்களின் பலமாக இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளை இந்த நாட்டில் உள்ள சிங்க பேரினவாதக் கட்சிகளும்,சர்வதேச நாடுகளும் தந்திரோபாயங்களை கையாண்டு சின்னாபின்னமாக்கியுள்ளார்கள்.அதேநிலைக்கு நாங்கள் தள்ளப்படக்கூடாது.அந்த நிலையேற்படுமானால் நாங்கள் பலவிதமான அதிக பாதிப்புக்களை சந்திப்போம் என்பதில் ஐயப்பாடுமில்லை.தமிழர்கள் ஒன்று சேர்ந்து பலமான இறுக்கமான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.வடகிழக்கு இணைந்த சமஸ்டிமுறையிலான ஆட்சிக்கட்டமைப்பை உண்டுபண்ண வேண்டுமானால் தமிழ்தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து சிறுதமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.தமிழர்கள் இந்தநாட்டிலே அனைத்து வசதிகளுடன் நிம்மதியாக வாழ வேண்டுமானால் ஒற்றுமையுடன் அனைவரும் தமிழ்தேசியக்கூட்டமைபுடன் ஒன்றிணைய வேண்டும்.அதேபோன்ற தீர்வைப் பெறுவதற்கும்,வடகிழக்கு இணைந்த தாயகத்தை பெறுவதற்கும்,சமஸ்டி ஆட்சியை உருவாக்குவதற்கும் அனைத்து தமிழர்களும் பகமையையும்,குரோதத்தையும் மறந்து தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பயணத்தில் இணைந்திருங்கள்.அப்போதுதான் தமிழர்களுக்கான சுயாட்சி,இறைமையுள்ள வடகிழக்கு நிருவாகத்தாயகம் ,சமஸ்டி பெறுவோம் எனத்தெரிவித்தார்.

Related posts