இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிடின் கூட்டமைப்பின் நிலைப்பாடு இதுவே

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் அரசாங்கத்திற்கு எதிரான அறவழிப் போராட்டத்தில் ஈடுபட தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய பிரச்சினைகளை பேச்சு வார்த்தைகள் மூலம் நியாயமான வழியில் தீர்வு ஒன்றினை பெற்றுக் கொள்ள விரும்புகின்றோம்.

இந்த நிலைப்பாடு தவறவிடப்படும் பட்சத்தில் நாங்கள் ஜனநாயக ரீதியான அகிம்சை வழிப் போராட்டங்களையும், அழுத்தங்களையும் வெளிப்படுத்துவது என்ற நிலைப்பாடு தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கின்றது.

எனவே மற்றவர்களுக்கு நெருக்கடிகளை கொடுக்காமல் நியாமான வழியில் போராட்டங்களை முன்னெடுப்பதே எமது கட்சியின் கொள்கை” என சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

Related posts