இம்முறை இளம்விஞ்ஞானி வினோஜ்குமாரின் பதினொரு கண்டுபிடிப்புக்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு

காரைதீவு  நிருபர் சகா
 
யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழினுட்ப பீடத்தில் இரண்டாம் வருடத்தில் பொறியியல் தொழினுட்பத்தை பயின்றுவரும் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கோவிலைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் எனும் பல்கலைக்கழக மாணவனின் பதினொரு கண்டுபிடிப்புக்கள் 2019ம் ஆண்டுக்கான தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
 
 ஒவ்வொரு ஆண்டும் விஞ்ஞானஇ தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்தி வருகின்றது. 
 
இவ்வருடத்துக்கான தேசிய மட்ட கண்டுபிடிப்புப் போட்டி எதிர் வரும் செப்டம்பர் 20ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை இலங்கை வர்த்தக மற்றும் கண்காட்சி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 
 
பாடசாலைப் பிரிவு பல்கலைக்கழக மற்றும் மூன்றாம் கல்வி நிலையங்கள் வர்த்தக பிரிவு மற்றும் திறந்த பிரிவு என நான்கு பிரதான பிரிவுகளையும் பதினான்கு தொழினுட்ப பிரிவுகளையும் கொண்டதாக நடைபெறவுள்ளது. 
 
அகில இலங்கை ரீதியான இப் போட்டிக்கு மாகாணமட்டப் போட்டிகளிலிருந்து கண்டுபிடிப்பாளர்களை தெரிவு செய்து தேசிய மட்டப் போட்டிகள் நடபெறும். 
 
தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம் பெறும் ஆக்கங்களிலிருந்து மிகச் சிறந்த கண்டுபிடிப்புக்களை சர்வதேச கண்டுபிடிப்பாளர் போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள். மேலும் அவர்களது கண்டுபிடிப்புக்களை வணிக மயப்படுத்துவதற்குரிய மானியங்கள் மற்றும் உதவிகளை வழங்குதலே இப் போட்டியின் பிரதான நோக்கமாகும். 
 
கிழக்கு மாகாண மட்டப் போட்டி கடந்த மே மாதம் 25ம் திகதி மட்டக்களப்பு மகஜன கல்லூரியில் நடைபெற்றது. அதில் சோமசுந்தரம் வினோஜ்குமார் பதின்மூன்று கண்டுபிடிப்புக்களை போட்டிக்காக காட்சிப்படுத்திருந்தார்.

Related posts