இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைக்கு 50 இளையோர்கள் யாழ்ப்பாண தளபதியால் தெரிவு

 

இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைகளுக்கு 50 இளையோர்கள் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் நேற்று சனிக்கிழமை தெரிவு செய்யப்பட்டனர்.

இராணுவத்தின் மனித நேய வேலை வேலை திட்டங்களுக்கான நாடளாவிய இணைப்பாளர் ஏ. செல்வாவின் நெல்லியடி அலுவலகத்துக்கு விண்ணப்பதாரிகள் நேரில் அழைக்கப்பட்டு இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியால் இவ்வேலைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவருக்கும் வருகின்ற மூன்று வார கால பகுதிக்குள் நியமன கடிதங்கள் வழங்கப்படும் என்று கட்டளை தளபதி உத்தரவாதம் வழங்கினார்.

Related posts