இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு…


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 121வது பிறந்த தினத்தைச் சிறப்பிக்கும் முகமாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு வாலிபர் முன்னணியின் தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மாவட்டக் காரியாலத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (31) காலை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர், மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உபதலைவர்கள், உறுப்பினர்கள், வாலிபர் முன்னணி உறுப்பினர்கள், கட்சிக் கிளைகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் இவ் இரத்ததான நிகழ்வு நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts