இலங்கையில் 15 வது கொரோனா வைரஸ் தொடர்பான மரணம்

இலங்கையில் 15 வது கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சமீபத்திய பாதிக்கப்பட்டவர் குளியாப்பிட்டியைச் சேர்ந்த 56 வயதான இதய நோயாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் அவர் இறக்கும் போது குளியாப்பிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இதய நோயாளி என்று கூறப்பட்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Related posts