இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பேராளர் மாநாடு

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பேராளர் மாநாடு சனிக்கிழமை 26 ஆம் திகதி மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி யில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்குமாகாண இணைப்பாளர் பொன்னுத்துரை உதயரூபன் தலைமையில் நடைபெற்றது

 

இந்நிகழ்வில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெனாண்டோ செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கிழக்குமாகாணத்தில் உள்ள பல கல்விவலயங்களில் இருந்து வருகைதந்து கலந்துகொண்டிருந்தனர்.

 அதேவேளை கிழக்கில் சேவையினை மீறி வெற்றிடங்களை நிரப்புவதனை விடுத்து முறையான நியமனம் வழங்குதல், குளிர்சாதன அறைக்குள் இருந்து கதிரைகளை பாதுகாப்பதற்காக கல்வியைச் சீரிழக்காதே, கிழக்கில் முறையான மாகாணக் கல்விப்பணிப்பாளரை நியமித்தல் உட்பட 11 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts