இளம் குடும்பப்பெண் தூக்கிட்டு தற்கொலை கன்னன்குடாவில் சம்பவம்

 
 
 
வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட இறக்கத்துறைவெளி கன்னன்குடா பிரதேசத்தில் இளம் குடும்பப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று மாலை (21) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
மூன்று பிள்ளைகளின் தாயாரான சந்திரமூர்த்தி விஜிதா (31) வயது என்பவரே தன்க்குத்தானே சுருக்கிட்டு தற்கொலை செய்து கெர்ண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.
 
கணவர் வெளிநாட்டில் வேலைக்காக சென்றிருந்த நிலையில் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில் சம்பவ தினத்தன்று வீட்டில் யாரும் இல்லாதா நிலையில் தனக்குத்தானே கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் பாடசாலை விட்டு வீடு சென்ற மகன் சம்பவத்தை கண்டு அயலவர்களை அழைத்து தூக்கில் இருந்து மீட்டெடுத்து 1990 இலக்க அம்புலன்ஸ்சை வரவழைத்து அவர்கள் பெண்ணின் மரணத்தை உறுதிப்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்;ளது.
 
மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதிவான் ரி.தியாகேஸ்வரன் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்ப இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டார். பிரேத பரிசோதனையின் பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்;டாhர்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
 

Related posts