இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நாவற்கேணிபிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சுரேஸ்குமார் பாஸ்கரன் (24) என்பவர் தனக்குத்தானே கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த சம்பவம் நேற்று (11) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவதுகுறித்த குடும்பஸ்தர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். நீண்ட நாட்களாக மதுஅருந்தி வந்ததனால் கணவன் மனைவிற்கிடையில் தாகறாரு ஏற்பட்டிருந்ததாகவும்.அயலில் உள்ள மரணச்சடங்கு வீட்டில் அவரின் குடும்பத்தினர் அங்கிருந்த போது வீட்டில் யாரும் இல்லாத வேளை அவரின் வீட்டின் கூரையினூடாக கீழ் இறங்கி அவரின் வீட்டு அறையில் தனக்குத்தானே தூக்கிட்டிருந்ததை கண்ட அவரின் நண்பன் உடனே தூக்கில் இருந்து அவரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

 

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி (வடக்கு) பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் அவர்கள் விசாரணைகளின்  பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி மட்டக்களப்பு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 

 

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts