இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை-வவுணதீவில் சம்பவம்

வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சாளையம்புக்கேணி பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு நேற்று (17) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
வவுணதீவு சாளையம்புக்கேணி பிரதேசத்தை சேர்ந்த (21) வயதுடைய அழகையா தினேஸ் என்பவரே தனக்குத்தானே களுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவரே
 
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட குறித்த நபர் இரு தினங்களுக்கு முன்னர் தனது மனைவி உடல் நலக்குறைவினால் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரை சம்ப தினத்தன்று சென்று பார்த்துவிட்டு வீடு திரும்பியதாகவும் அன்றை தினத்தில் வீட்டு அறையினுள் நித்திரைக்கு சென்றவர் வெளியில் வராத நிலையில் அவரின் மாமா வீட்டு கூரையினூடாக சென்று பார்த்த போது வீட்டு அறையினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டதாகவும் குறித்த நபரின் குடும்பத்தில் மூவர் தூக்கிட்டு ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
 
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்ப இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்ட பின்னர் பிரேத பிரிசோதனையின் பின்னர் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைககும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts