இ.போ.சபை பஸ்ஸானது மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்து.

மட்டக்களப்பு கிரான்குளத்தில் இ.போ.சபை பஸ்ஸானது மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்து.சாரதி சிறுகாயம்.

இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பயணிகள் பஸ்ஸானது மட்டக்களப்பு-கல்முனை நெடுஞ்சாலை பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை(23)அதிகாலை 4.40 மணியளவில் வீதியை விட்டு விலகி இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் கிராமத்திலே இவ்விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி இ.போ.சபை சாலைக்கான பஸ்ஸானது யாழ்பாணத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பு வழியூடாக அக்கரைப்பற்றுக்கு பயணித்துக் கொண்டிருக்கையிலே பாதையை விட்டு விலகி மின்கம்பத்துடன் விபத்துக்குள்ளானது.இதனால் குறித்த பஸ்ஸை செலுத்திய சாரதி மட்டுமே சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் பயணிகள் எவரும் காயப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.

இவ்விபத்தினால் இ.போ.சபைக்கான பஸ்ஸின் முன்பக்கம்,இலங்கை மின்சார சபைக்குரிய மின்கம்பம்,மின்சாரகம்பிகள்,மின்சாரசபை உடைமைகள் சேதமடைந்துள்ளதுடன் காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் விபத்து சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Related posts