உணர்வுள்ள உறவுகள் அமைப்பின் கல்விக்கான பணி முன்னெடுப்பு

இ.சுதாகரன்

 
உணர்வுள்ள உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் வெலிக்கந்தையிலிருந்து சுமார் பதின்மூன்று கிலோமீற்றர் தூரத்திலுள்ள போக்குவரத்து வசதிகள் குறைந்த பின்தங்கிய கிராமமான ஊத்துச்சேனை வீரநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் 1 முதல் 9 வரையான தரங்களில் பொருளாதார வறுமை நிலைக்கு மத்தியில் கல்வி கற்கும் சுமார் 65 மாணவர்களுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்றது. நிகழ்வில் உணர்வுள்ள உறவுகள் அமைப்பின் பிரதி நிதிகள் ,ஆசிரியர்கள் உட்பட மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Related posts