உயர்தரம் வரை கற்ற 7,500 பேருக்கு பயிற்சி செயற்றிட்ட உதவியாளர் நியமனங்கள்

உயர்தரம் வரைகற்ற 7,500 பேருக்கு பயிற்சி செயற்றிட்ட உதவியாளர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இதுதொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

அபிவிருத்தித் திட்டங்களை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக அந்த அபிவிருத்தித் திட்டங்களை மதிப்பீட்டுக்கு உட்படுத்தவதற்கும் இணைப்பு நடவடிக்கைகளும் அத்தியாவசிய பணிகளாக உள்ளன. 
இதற்காக க.பொ.த (உ ஃத) பரீட்சை வரையில் கல்வி கற்று தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர் சமூகத்தை இணைத்துக் கொள்வதன் மூலம் அவர்களை தேசிய அபிவிருத்தி நடவடிக்கைகளின் பங்குதாரர்களாக முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
 இதற்கமைவாக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சுக்கு 7500 பயிற்சித்திட்ட உதவியாளர்களை இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 
இதே போன்று தெரிவு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு பயிற்சி திட்ட உதவியாளர் பதவியில் நியமிப்பதற்கும் அவர்களுக்கு ரூபா 15000 ஐ மாதாந்தம் செலுத்துவதற்கும் கௌரவ பிரதமர் மற்றும் தேசிய கொள்கை பொரளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts