உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்தாய் 72 விழா

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்தாய் 72 எனும் விழா தமிழ்நாட்டில் நடைபெற்றுவருகிறது.
கடந்த 1ஆம் திகதி ஆரம்பமான இவ்விழா எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெறும்.
 
தமிழகமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்ததினத்தையொட்டி அங்கு சிறப்புச்சொற்பொழிவுகள் கருத்தரங்குகள் கவியரங்குகள் பாராட்டுவிழாக்கள் நூல் வெளியீடு ஓவியக்கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.
 
நேற்று அங்கு இடம்பெற்ற கவியரங்கில் பங்கேற்றவர்களுக்கு அனைந்திந்திய எழுத்தாளர்கள் சங்க தேசியத்தலைவர் முனைவர் கோ.பெரியண்ணன் மற்றும்  இலங்கைப்பிரதிநிதியான காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.
 
இதன்போது பல்கலைக்கழக பேராசிரியர்கள் உதவிப்பேராசிரியர்கள் பெருங்கவிஞர்கள் கல்விமான்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Related posts