உலகத் தமிழ் பல்கலைக்கழக நூல்விருதுக்கு இலங்கையிலிருந்து வைத்தியஅத்தியட்சகர் முரளீஸ்வரனின் நூல் தெரிவு!

அமெரிக்க  உலகத் தமிழ் பல்கலைக்கழக சிறந்த நூல்களுக்கான விருதுக்கு இலங்கையிலிருந்து கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியஅத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இராசரெத்தினம் முரளீஸ்வரனின் நூல் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
 
அவர் முதன்முதலாக எழுதிய ஒரு மருத்துவரின் மருத்துவமனை நாட்கள் எனும் தலைப்பிலான கவிதைத்தொகுப்பு நூலுக்கே இவ்விருது கிடைக்கப்பெற்றுள்ளது.
மொத்தமாக 9இலக்கிய நூல்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. ஆனால் இலங்கையிலிருந்து தெரிவான ஒரேயொரு நூல் இதுவாகும்.
 
சிறந்த நூல்களுக்கு விருது வழங்கும் இனிய விழா இன்று(27) ஞாயிற்றுக்கிழமை இந்தியா சென்னையில் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் செல்வின்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது.
 
சென்னை மணிமேகலைப் பிரசுர நிருவாகஇயக்குனர் முனைவர் ரவி தமிழ்வாணன் வாழ்;த்துரை வழங்குகிறார்
மருத்துவ அனுபவங்களும் கவிதை அனுபவமும் இணைந்த மருத்துவமனை நாட்களின் பற்றிய கவிதைகள் சேர்ந்தது இக்கவிதை தொகுப்பு.

Related posts