உழவு இயந்திரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி

விவசாய அறுவடையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்றில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று (14) வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் பலியாகியவர் 52 வயதுடையவர், வெல்லாவெளி 40 ஆம் கிராமத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts