ஊஞ்சலாடியசிறுவன் சேலையில் கழுத்துச் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம்

 

கொக்கட்டிச்சோலைப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவுப் பிரதேசத்தில் ஊஞ்சலாடியசிறுவன் சேலையில் கழுத்துச் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று சனிக்கிழமை 23 இடம்பெற்றுள்ளது
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் மகிழடித்தீவு கட்டுபத்தை பகுதியைச் சேர்ந்த மனோகரன் கேதீசன் 8 வயது ஊஞ்சல் சேலையில் சிக்கியே உயிரிழந்துள்ளார்.
பாடசாலை விடுமுறை என்பதனால் தாயாரின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்த போது மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.தாயார் மாடுமேய்த்துவிட்டு தனது மகனை வீட்டில் வந்து தேடியபோது அவர் மாமரத்தில் சேலையில் சிக்கிஇருந்ததாகவும் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைவாக மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தைப் பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனை நடாத்துமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார். மேலதிக விசாரணையினை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

 

Related posts