‘எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்’

எதிர்க்கத் துணிந்தால் தமிழ் வாழும்; எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்” என, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட உழவர் தின நிகழ்வு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கருணமலைப் பிள்ளையார் ஆலய முன்றலில் (18) நடைபெற்ற போதே, இவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர்  மேலும் உரையாற்றுகையில், “தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் மிக முக்கியமானதாக தைப்பொங்கல் விழா விளங்குகின்றது. உழவர்கள் சூரியனுக்கு, பட்டிகளுக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும் இது கொண்டாடப்படுகின்றது. இதனை உழவர்கள் வாழுகின்ற போரதீவுப்பற்று பிரதேசத்தில் கொண்டாடுவதையிட்டு மகிழ்கின்றேன்.

“வேளாண்மை தொழிலை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்களே. இவ்வாறான பண்பாடுகளை இளம் சந்ததிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இந்நிகழ்வுகளை மாவட்டமே இணைந்து நடத்துகின்றது” என்றார்.

Related posts