எரிபொருள் விலை எதிர்வரும் திங்கள் அன்று குறைவடையும்

மண்ணெண்ணெய் விலை எதிர்வரும் தினங்களிற்குள் குறைவடையும் என கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் காரணமாக இந்த நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 25 தொடக்கம் 30 ரூபாவினால் குறைவடையக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து நாட்டில் பல்வேறு இடங்களில் மீனவர்கள் போராட்டம் நடாத்திவந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related posts