எரிபொருள் விலை சூத்திரம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில்

அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை சூத்திரம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இதற்கு முன்னர் நீக்கப்பட்ட வரி மீண்டும் விதிக்கப்படும் என உயர்மட்ட தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாய் வரியும் ஒரு லீற்றர் டீசலுக்கு 12 ரூபாய் வரியும் விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற இறுதி கலந்துரையாடல் வார இறுதியில் இடம்பெறவுள்ளது. குறைந்தபட்சம் ஒரு லீற்றர் பெற்றோல் 15 ரூபாயிலும், டீசல் 10 ரூபாயிலும் அதிகரிக்க கூடும் என அமைச்சரவை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Related posts