ஐக்கிய தேசிய முன்னனியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் காரியாலயம்

(துதி)

ஐக்கிய தேசிய முன்னனியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் காரியாலயம் வாழைச்சேனை கல்குடா வீதியில்  திறந்து வைக்கப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மங்கள செனரத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts