ஐந்து வயது சிறுமியை வன்புணர்ந்த நபருக்கு நீதிமன்றம் இன்று வழங்கிய தண்டனை

ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 76 வயதான வயோதிபருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவாரச்சி இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

தெமடகொட பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Related posts