கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; இருவர் கைது

மட்டக்களப்பு — கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காட்டுப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம், (27) மாலை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.

இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுடன், அங்கிருந்து 900 லீற்றர் கோடா, 46 லீற்றர் கசிப்பு, 2 கேஸ் சிலிண்டர்கள், 4 பரல்கள், கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts