கஞ்சா வைத்திருந்தவர்கள் கைது

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் தம்பலவத்தை பிரதேசத்தில் விற்பனைக்காக இரு வேவ்வேறு இடங்களில் காஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பம் நேற்று 10 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மண்டூர் தம்பலவத்தை மற்றும் வேக்கறி வீதி தம்பலவத்தை ஆகிய இடங்களில் நிலையப் பொறுப்பதிகாhரி பீ.டவ்யூ.எம்.ஆனந்தசிறி அவர்களின் வழிகாட்டலில் இந்த கைது நடடிவடிக்கை இடம்பெற்றுள்ளது.இதில் வயோதிப பெண் மற்றும் இளைஞன் ஒருவரும் 15 கிராம் மற்றும் 5 கிராம் நிறையுடைய கஞ்சாவுடன் கைது செய்ப்பட்டுள்ளனர்.
 
கைது வெய்யப்பட்டுள்ள இருவரும் இன்று மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts