கடமைக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது

உஹன, லாத்துகல வனப்பகுதியில் வெட்டப்பட்ட மரக்குற்றிகளை உழவு இயந்திரத்தில் கொண்டுசெல்வதற்கு முற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் வந்த சிலர் லாத்துகல வீதியை மறித்து பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்கேநபர்கள் பயணித்த முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts