கடற்கரை தூய்மைப்படுத்தல் நிகழ்வு

திருகோணமலை அகரம் மக்கள் மய்யம் கடற்கரை தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டத்தினை ஞாயிற்றுக்கிழமை 2018.10.14  மேற்கொண்டனர். உட்துறைமுக வீதியில் உள்ளகடற்கரையே இவ்வாறு தூய்மைப்படுத்தப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,, கஸ்தூரி கலெக்சென் நிறுவனம், ரிங்கோ எயிட். சாரணர்கள், உவர்மலை விவேகாநந்தா கல்லூரி பழைய மாணவர் சங்கம். விஜய் நற்பணி மன்றம், லிற்றோ எரிவாயு நிறுவனம், போன்ற அமைப்புகளும் இதில் பங்கெடுத்தன.

திருகோணமலை நகர சபை தலைவர் நா.இராசநாயகம் அவர்களும் இவ்வேலைத்திட்டத்தில் முழுமையாக பங்குகொண்டமை பங்குதாரர்களை உற்சாகப்படுத்தியது.

Related posts