கடிதமொன்றை எழுதி விட்டு குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை-கல்லடியில சம்பவம்

காத்தாங்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்;ட மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான சண்முகம் நவநீதன் வயது (30) என்பவரே தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக இன்று (04) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது வழமையாக தனது வேலையினை முடித்து விட்டு வீடு திரும்பிய நிலையில் அவரின் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத்தகறாரு காரணத்தினால் தனது வீட்டின் அறைக்குள் சென்றவர் வெளியில் வராத நிலையில் வீட்டின் அறையினை அவரின் உறவினர்கள் உடைத்து உட்புகுந்த வேளை தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமான மீட்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
 
மட்டக்ளப்பு  நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி வேலு மணிமாறன்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை காத்தாங்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Related posts