கடும் மழை மற்றும் காற்றினால் கண்டி மாவட்டத்தில் 551 பேர் பாதிப்பு

கண்டி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலையின் காரணமாக, 5 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய, 116 குடும்பங்களைச் சேர்ந்த, 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 50 வீடுகள் இதனால் சேதமடைந்துள்ளதாகவும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின், கண்டி மாவட்ட உதவிப் பணிப்பாளர், இந்திக ரணவீர தெரிவித்துள்ளார்.

பாதஹேவாஹெட்ட பிரதேச செயலகப் பிரிவில், 9  கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த,58 பேரும்,குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும்,  பஸ்பாகே கோரளய பிரதேச செயலகத்துக்குட்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேரும்,  உடுநுவர  பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 7 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேரும், இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பாதுகாப்பான இடங்களில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 378 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின், கண்டி மாவட்ட உதவிப் பணிப்பாளர், இந்திக ரணவீர தெரிவித்துள்ளார்.

 


Related posts