கணேசாவித்தியாலயத்திற்கு போட்டோப்பிரதி இயந்திரம் மற்றும் கணணித் தொகுதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு

சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட 7 ஆம் கிராமம் சவளக்கடை கணேசாவித்தியாலயத்திற்கு போட்டோப்பிரதி இயந்திரம் மற்றும் கணணித் தொகுதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை அதிபர் க.பேரானந்தம் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
நிந்தவூர் பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் யு.எல்.சுலைமான்லெப்பை அவர்களினது முயற்சியின் பயனால் போட்டோக்கொப்பி இயந்திரம் மற்றும் இரண்டு கணணித்தொகுதிகள் மற்றும் பிறின்டர் ஆகியவற்றை அவர் பாடசாலைக்கு நேரடியாக வருகைதந்து கையளித்துள்ளார்

இவ் உதவியினை வழங்குவதற்கு உதவிய பிரதித் தவிசாளர் யு.எல்.சுலைமான்லெப்பை அவர்களுக்குப் பாடசாலையின் அதிபர் க.பேரானந்தம் மற்றும் பாடசாலை சமூகம் நன்றி தெரிவித்துள்ளது

Related posts