கண்டுமணி மகா வித்தியாலயத்தில் போதைப்பொருள் ஒழிப்புதொடர்பான கருத்தரங்கு

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய பாடசாலை மட்டத்தில்   முன்னெடுக்கப்பட்டுவரும் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு மாணவர்களை அறிவுறுத்துவதற்கான கருத்தரங்கொன்று பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபர் க.கமலநாதன் தலைமையில் நடைபெற்றது
இக் கருத்தரங்கில்  மட்டக்களப்பு மாவட்ட மதுவரி திணைக்கள உதவிப் பொறுப்பதிகாரி பிரதாபன், பரிசோதகர் காண்டீபன் ஆகியோர்  கலந்து கொண்டனர். இதன் போது  போதைப் பொருள் பாவனையால் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும், சமூக ரீதியாகவும் எவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது போன்ற விடயங்கள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

?
?

Related posts