கல்முனைப்பிராந்தியத்தில் 621ஆக எகிறிய கொரோனா தொற் று!அக்கரைப்பற்று: 303 கல்முனை: 105அட்டாளைச்சேனை: 63

கிழக்கு மாகாணத்திலுள்ள நான்கு சுகாதாரபிராந்தியங்களுள்  கல்முனைப்பிராந்தியத்தில் தினம் தினம் கொரோனாத் தொற்று அதிகரித்துவருகிறது.
13சுகாதாரப்பிரிவுகளைக்கொண்ட கல்முனைப்பிராந்தியத்தின் தொற்றுக்களின் எண்ணிக்கை 621ஆக எகிறியுள்ளது.
 
கல்முனைப்பிராந்தியத்துள் வருகின்ற அக்கரைப்பற்றுக் கொத்தணியில் 578பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீதி பிராந்தியத்தின் ஏனைய சுகாதாரப்பிரிவுகளில் இனங்காணப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் டொக்டர் குண.சுகுணன் நேற்று(22) காலை 10மணி வரையான தரவுகளை வெளியிட்டுள்னார்.
 
பிரதேசங்களின் நிலைமை.
 
பிராந்தியத்தில் தனியொரு பிரிவு அதிகூடிய தொற்றுக்களைக்கொண்டது என்றால் அது 303தொற்றுக்களைக் கொண்ட அக்கரைப்பற்று எனலாம்.
 
இரண்டாவதாக  கல்முனை மாநகரஎல்லைக்குள் 105 தொற்றுக்கள் அதிகரித்திருக்கிறது. கல்முனை தெற்கில் 87பேரும் சாய்ந்தமருதில் 28பேரும் கல்முனை வடக்கில் 10பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.  
 
அட்டாளைச்சேனையில் 63தொற்றுக்கள்.பொத்துவிலிலிலும் திடீர் அதிகரிப்பு காட்டியுள்ளது. அங்கு தொற்றுக்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. உல்லைப்பகுதி முடக்கப்பட்டுள்ளது. 
 
ஆலையடிவேம்பில்  22பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இறக்காமத்தில் 23பேரும்திருக்கோவிலில் 13பேரும் சம்மாந்துறையில் 14பேரும் காரைதீவில் 8பேரும் நிந்தவூரில் 7பேரும் நாவிதன்வெளியில் 3பேரும்  இனங்காணப்பட்டுள்ளனர்.
 
இன்னும் பெறப்பட்ட பிசிஆர் சோதனைகளின் பெறுபேறுகள் கிடைக்கப்பெறவில்லை. அவை வந்தால் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்ரப் ஆதாரவைத்தியசாலையிலிருந்து இதுவரை வைத்தியசாலை ஊழியர்கள் 8பேருக்கும் நோயாளிகள் 7பேருக்குமாக மொத்தம் 15பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
 
பிராந்தியத்திலுள்ள பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 88பேரும் புதிதாக உருவாக்கப்பட்ட மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 99பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
 
பிராந்தியத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களான ஒலுவிலில் 28பேர்   தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நுரைச்சோலை நிலையம் தயாராகிவருகிறது.
இதுவரை கல்முனைப்பிராந்தியத்தில் இரு கொரோனா இறப்பு சம்மாந்துறையிலும் ஒலுவிலிலும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதுவரை இப்பிராந்தியத்தில் 15780பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பிசிஆர் சோதனை 9871பேருக்கும் அன்ரிஜன் சோதனை 5909பேருக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts