கல்முனைப்பிராந்தியத்தில் 68வீதமானோருக்கு தடுப்பூசிஏற்றப்பட்டுள்ளது!நாவிதன்வெளி 86%,திருக்கோவில் 84%, ஆலையடிவேம்பு 82% சாதனை.

கல்முனைப்பிராந்தியத்திலுள்ள 13 சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவுகளில் மொத்தமாக 1லட்சத்து 61ஆயிரத்து 44 தடுப்பூசிகளைச் செலுத்தி இதுவரை 67.82%வீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.
 

பிராந்தியத்தில் அதிகூடியதாக  நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 86.46%தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அங்கு தடுப்பூசி ஏற்றப்படவேண்டிய 10837பேரில் இதுவரை 9370பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 84.03% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அங்கு தடுப்பூசி ஏற்றப்படவேண்டிய 15174பேரில் இதுவரை 12752பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 81.08% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அங்கு தடுப்பூசி ஏற்றப்படவேண்டிய 13670பேரில் இதுவரை 11183பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை இறக்காமம் பிரிவில்  79.65% ,காரைதீவுப்பிரிவில்  77.79%, நிந்தவூர்பிரிவில் 72.76 %,பொத்துவில் பிரிவில் 67.46 %,கல்முனை தெற்குப்பிரிவில்  67.16%,அட்டாளைச்சேனைப்பிரிவில்  65.36 %,சாய்ந்தமருதுப்பிரிவில் 65.08%  ,அக்கரைப்பற்று பிரிவில் 62.46%, சம்மாந்துறைப்பிரிவில்  57.06%,கல்முனை வடக்குப்பிரிவில்  50.48 % தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Related posts