கல்முனை உவெஸ்லியில் 2பேருக்கு 9ஏ சித்திகள்!

நேற்று வெளியான க.பொ.த. சாதாரண தர பெறுபேறுகளின்படி கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் இரு மாணவர்கள் சகலபாடங்களிலும் 9ஏ சித்தி பெற்று சாதனைபடைத்துள்ளதாக அதிபர் செ.கலையரசன் தெரிவித்தார்.
 
செல்வி ஜீவதாஸ் கம்சிகா , செல்வி குணலிங்கம் தஸாரிகா ஆகிய இரு மாணவர்களே இவ்விதம் 9ஏ சித்தி பெற்றவர்களாவர்.
 
8ஏ 1பி சித்திபெற்று முரளிதரன்  கோதமி அடுத்த நிலையிலுள்ளார்.
இதேவேளை இம்முறை எந்தவொரு மாணவரும் 9எவ் எடுக்கவில்லையெனவும் அதிபர் செ.கலையரசன் தெரிவித்தார்.

Related posts