கல்முனை பிரதேசத்திற்கு பெருமை தேடித்தரும் கராத்தே சகோதரர்கள்! தோடர் விருதுகளைப் பெற்று சாதனை!!

கராத்தே கலையில் பல சாதனைகள் படைத்து தேசிய ரீதியிலும் சர்வதேச போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றிகளும் விருதுகள் பலவும் பெற்று கல்முனை பிரதேசத்திற்கும்
மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் நாட்டிற்கும் பெருமை தேடித்தரும் சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த கராத்தே சகோதரர்கள் மூவர்.

கல்முனை மாநகரத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ். பாலுராஜ் மற்றும் அவரது சகோதரர்களான எஸ்.கோமன்ராஜ் எஸ்.சோபன்ராஜ் ஆகிய சகோதரர்களே சிறுவயது மூதல் கராத்தேயில் ஆர்வமான இவர்கள் தேசிய சர்வதேச போட்டிகளில் விருதுகள் பெற்று பாராட்டுக்களையும் பெற்றுவருகின்றார்கள்.

இலங்கையின் 44 ஆவது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு திருகோணமலையில் கடந்த 28.12.2018 அன்று கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்கள் மாகாண ஆளுநர் போகல்லாகம மாகாண கல்வி மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர் முத்துபண்டா ஆகியோரால் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் J.K.M.O மாணவரான பாலுராஜ் 44 ஆவது தேசிய மட்ட போட்டியில் தங்கப் பதக்கம் வென்றமைக்காக சிறந்த விளையாட்டு வீராராகவும் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மேலும் இவர் 2014 2016 2018 ஆம் ஆண்டுகளில் புரிந்த மேலதிக சாதனைகளையும் கருத்தில் கொண்டு சிறப்பு விருதினையும் பெற்று இப்பிரதேசத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளார்.

இவரின் ஆசானாகிய சிகான் Eng .S முருகேந்திரன் அவர்களுக்கு சிறந்த ஆசானாக்குரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

Related posts