கல்முனை பொலிசாரினால் கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கை 

 
கல்முனை பொலிசாரினால் கோவிட்- 19 தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
இதற்கமைவாக
”மீற்றரான வாழ்க்கை” எனும் தொனியிலான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்முச்சக்கரவண்டிகளுக்கு கல்முனை போக்குவரத்து பிரிவு பொலிஸாரினால்  ஒட்டும் வேலைத்திட்டம்
இடம் பெற்று வருகிறது.
 
குறித்த இந்நிகழ்வு கல்முனை பொலில் நிலையம் முன்பாக உள்ள வீதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கல்முனை பூராவும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கல்முனை  பொலிஸ் நிலைய  பொறுப்பாதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த அவர்களின் வழிகாட்டலில் கல்முனை போக்குவரத்து பிரிவு பொறுப்பாதிகாரி பி.நிஹால் சிறிவர்தனவின் ஏற்பாட்டில் இடம் பெற்றுகிறது
 
இதன் போது பிரதான பொலில் பரிசோதகர்களான ஏ.பி. இந்திக உதயவர்தன, ஏ.எல் .ஏ.வாஹிட் மற்றும் போக்குவரத்து பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டுமுச்சக்கரவண்டிகளுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்தனர். சுகாதார நடை
முறைக்கமைவாக இவ் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Related posts