கல்விமாணி பட்ட கற்கை நெறி 2022 – 2025 விண்ணப்பித்தோருக்கு நேர்முகத்தேர்வு

(சா.நடனசபேசன்)

தேசிய கல்வி நிறுவகத்தினால் நடாத்தப்படும் கல்விமாணி பட்ட கற்கை நெறி 2022 – 2025 ஆண்டுகளுக்கான மட்டக்களப்பு பிராந்திய நிலையத்திற்கு  விண்ணப்பித்த மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் 9 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை இடம்பெற இருப்பதாக தேசிய கல்வி நிறுவகத்தின் மட்டக்களப்பு கற்கை நிலையத்தின் இணைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எஸ்.யோகராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய கற்கை நிலையத்தில் பயிலுவதற்கு இருக்கின்ற ஆரம்பக்கல்வி சமூகவியல் அழகியல் ஆகிய பாடங்களுக்காக 288 மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வு மேற்குறிப்பிடப்படடுள்ள தினங்களில் இணைய வழிமூலம் இடம்பெற இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

 

Related posts