களுதாவளையில் விஷம் அருந்திய மாணவன் உயிரிழந்த பரிதாபம் !!

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை 4 ஆம் குறிச்சியைச் சேர்ந்த  மாணவன் நடராசா ஹம்சரூபன் நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து மரணம் அடைந்துள்ளார்.

இவர் விஷம் அருந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஹம்சரூபன் கோவிற்குளம் தேசிய உயர்தரக் கலூரியில் HNDA பட்டப்படிப்பு இறுதி ஆண்டு மாணவன் ஆவார்.

Related posts