களுதாவளை பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பணியை இடைநிறுத்தம்

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட களுதாவளை பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பணியை இடைநிறுத்தியுள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தெரிவித்துள்ளார்

இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது

களுதாவளை பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பணியை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி களுதாவளையில் உள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

களுதாவளை 04ம் குறிச்சியில் அமைக்கப்பட்டுவரும் தொலைத்தொடர்பு கோபுரத்தினால் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.பாடசாலைகளும், வைத்தியசாலைகளும் அமைந்திருக்கும் இடத்திலிருந்து 150 மீற்றருக்கு அப்பால்த்தான் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்படலாம் என்றிருக்கின்றது.

தற்போது அமைக்கப்படும் கோபுரம் திருஞானசம்பந்தர் குருகுலத்திற்கு அண்மையிலாகும். இது 150 மீற்றர்களை விடக் குறைவானதாகும்

இங்கு 40க்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து கல்வி கற்கின்றார்கள். உலக சுகாதார அமைப்பினால் தொலைத்தொடர்புக் கோபுரங்களின் பாதிப்புத் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் கதிர்வீச்சின் காரணமாக 15க்கும் மேற்பட்ட நோய்கள் தாக்கலாம் எனக் கூறுகிறார்கள்.

Related posts