களுவாஞ்சிகுடியில் தந்தை செல்வாவின் 44ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு இன்று இடம்பெற்றது.

தந்தை செல்வாவின் 44ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடியில் மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 44ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில்  மாபெரும் இரத்ததான நிகழ்வு களுவாஞ்சிகுடியில் இன்று திங்கட்கிழமை(26)காலை 9.00 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணாக்கியனின் அலுவலகத்தில் மாவட்ட வாலிபர் முன்னணியின் தலைவர்  லோ.தீவாகரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமரர் தந்தை செல்வாவிற்கு இரண்டு நிமிடம் மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டு,அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் பாராளுமன்ற உறுப்பினரின் வளாகத்தில் பழமரக்கன்றுகள் தந்தை செல்வாவின் நினைவாக நடப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைகளின் இரத்த வங்கிப்பிரிவினர் குறித்த நிகழ்வுக்கு வருகைதந்து இரத்ததானத்தை பெற்றுக்கொண்டார்கள்.

இந்த இரத்தான நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணாக்கியன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,கி.துரைராஜசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் தலைவருமான பா.அரியநேந்திரன்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்புவைத்திய அதிகாரி க.ஹரிசானன்,இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் செயலாளர்,பொருளாளர்கள்,தாதி உத்தியோகஸ்தர்கள், இலங்கை தமிழரசுக்கட்சியின் அங்கத்தவர்கள்,வாலிபர்கள்,மகளீர்கள் கலந்துகொண்டார்கள்.

Related posts