களுவாஞ்சிகுடியில் நுண்கடனை ஒழிப்பதற்கு கிராமிய வங்கி திறக்கப்பட்டது.

மண்முனை தென்எருவில் பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிராமிய வங்கி திறப்புவிழா கடந்த வியாழக்கிழமை(15.11.2018) காலை 11.00 மணிக்கு களுவாஞ்சிகுடி பலநோக்கு சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

மண்முனை தென் எருவில் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவரும்,வைத்திய அத்தியட்சகருமான குணசிங்கம்-சுகுணன் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவுக்கு சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி  உதவி ஆணையாளர் கே.வீ.தங்கவேல்,களுவாஞ்சிகுடி மக்கள் வங்கி முகாமையாளர் என்.எம்.சாந்தன்,களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.ஜீ.யூ.ஐ.குணவர்த்தன, கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பீ.தியாகராசா,மற்றும் பலரும் கிராமிய வங்கித்திறப்பு விழாவில் கலந்துகொண்டார்கள்.

இதன்போது வங்கிச்சேவை,புதிய வங்கிக்கணக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது,கிராமிய வங்கி கணக்கை புதுப்பித்தல்,புதிய கணக்குகளை மேம்படுத்தல்,கிராமியமட்டத்தில் கிராமிய வங்கிச்சேவையை விஸ்தரித்தல் போன்றன மேற்கொள்ளப்படவுள்ளது.இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவுச்சின்னமும் கிராமிய வங்கியால் வழங்கிவைக்கப்பட்டது.

Related posts