களுவாஞ்சிகுடி நகர்ப்பகுதி வீதிகளை அண்டியதாக காணப்படும் வடி கான்களை சுத்தம் செய்யும் சிரமதானப்பணி

மழைகாலம் ஆரம்பமாகிய காரணத்தால் களுவாஞ்சிகுடி நகர்ப்பகுதி வீதிகளை அண்டியதாக காணப்படும் வடி கான்களை சுத்தம் செய்யும் சிரமதானப்பணியொன்று முன்னெடுக்கப்பட்டது
குறித்த சிரமதான பணியினை களுவாஞ்சிகுடி இளைஞர் முன்னேற்ற விளையாட்டு கழக்த்தினர், சகாதார வைத்திய அதிகாரி அலுவலக சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபையினர், ஆகியோர் ஒன்றிணைந்து இச் சிரமதானப்பணியினை முன்னெடுத்திருந்தனர்.
மழைகாலம் ஆரம்பமாகிய காரணத்தால் இரண்டு நோக்கங்களை கருத்திற் கொண்டு இச் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது. ஓன்று டெங்கு நுளம்பினை கட்டுப்படுத்தல் மற்றயது நீர் வடிந்தோடுவதற்கு வடிகான்களில்  காணப்படும் தடைகளை அகற்றி நீர்தங்கு தடையின் வடிந்தோடுவதற்கு வழியேற்படுத்தி கொடுத்தல் போன்ற நோக்கங்களை மையப்படுத்தியதாகவே இச்சிரமதானப்பணியினை முன்னெடுக்கப்பட்டது. வருடாவருடம் இவ் வடிகான்கள் தடைப்பட்டு காணப்படுவதால் மழைகாலங்களில் வெள்ளம் வடிந்தோட முடியாமல் தேங்கி நிற்கின்றன இதனால் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படுவதுண்டு அதனை தவிர்க்கும் முகமாக குறித்த சிரமதானப் பணியினை முன்னெடுத்தாக பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் ரவிகரன் தெரிவித்தார்…
?

Related posts